Thursday 6 September 2012

மொபைல்போன்' வழங்கும் திட்டம் : மத்திய அரசு மீது சவுதாலா சாடல்

ரோடாக்: ""வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு, மொபைல்போன் வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதன் மூலம், மற்றொரு "மெகா' ஊழலுக்கு தயாராகி வருகிறது,'' என, அரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா தெரிவித்துள்ளார்.அரியானா மாநிலம், லடயானில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற சவுதாலா பேசியதாவது:நம் நாட்டில், இரண்டு வேளை சாப்பாட்டிற்காக, ஏழை மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில், அவர்களுக்கு "மொபைல்போன்' வழங்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது, ஏழை மக்களை ஏளனப்படுத்தும் செயல்.ஏழை மக்களுக்கு <உணவு கிடைக்க என்ன செய்ய வேண்டுமோ, அதற்குத் தான் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். மாறாக, "மொபைல்போன்' போன்ற ஆடம்பரப் பொருட்களை அவர்களுக்கு வழங்குவதால், எந்தப் பயனும் ஏற்பட்டு விடாது. அப்படி, இலவசமாக போன் வழங்கினாலும், அவர்களிடமிருந்து, "ரீ சார்ஜ்' என்ற பெயரில், மொபைல்போன் நிறுவனங்கள் கட்டணம் வசூலித்துவிடும். இதன்மூலம், மிகப் பெரிய ஊழலுக்கு மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது என்பது தெளிவாகிறது.இவ்வாறு சவுதாலா பேசினார்.இதற்கிடையில், சவுதாலா மீதான ஊழல் வழக்கை நடத்துவதற்கு, சி.பி.ஐ., பரிந்துரை செய்துள்ளதாக, நேற்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. கடந்த 2003-04ம் ஆண்டு, அரியானாவில், சவுதாலா முதல்வராக இருந்த போது, மாநில அரசு அதிகாரிகளில் இருந்து, ஐ.ஏ.எஸ்., பணிக்குத் தேர்வு செய்வதில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்த போது, சி.பி.ஐ., சவுதாலா மீது வழக்கை பதிவு செய்ய பரிந்துரை செய்தது.

www.dinamalar.com (6 September 2012 )
http://www.makkalsanthai.com/

இலங்கை ராணுவத்தின் 450 வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி


புதுடில்லி: "இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு, இந்தியாவில், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது' என, ராஜ்யசபாவில், மத்திய ராணுவ அமைச்சர் அந்தோணி தெரிவித்தார்.

தமிழகத்தில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். ஆனால், அதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று ராஜ்யசபாவில், தி.மு.க., - எம்.பி., கனிமொழி எழுத்து மூலமாக கேட்ட கேள்விக்கு, மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி அளித்த பதிலில், "இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த இரு வீரர்களுக்கு, தமிழ்நாட்டில் வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்பது உண்மை தான். இலங்கை உட்பட நமது அண்டை நாடுகளின் ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி பரிமாறப்படுவது வழக்கமான ஒன்று தான்' என்று குறிப்பிட்டு இருந்தார். இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த, 450க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு, நாட்டில் பல மாநிலங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், "தமிழ்நாட்டில் வெலிங்டன், கர்நாடகாவில் பெங்களூரு மற்றும் பெல்காம், கேரளாவில் கண்ணூர் ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது' என, ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

www.dinamalar.com (6 September 2012 )
http://www.makkalsanthai.com/


ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்ட எம்.பி.,க்கள் கைகலப்பு


அரசுப் பணியில் உள்ள, எஸ்.சி., மற்றும் எஸ்.டி., வகுப்பினருக்கு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதாவை, நேற்று, ராஜ்ய சபாவில் கடும் அமளிக்கு இடையே, மத்திய அரசு தாக்கல் செய்தது. எம்.பி.,க்களின் கைகலப்பு மற்றும் பெரும் ரகளை காரணமாக இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.
அரசு பணியில் உள்ள எஸ்.சி., மற்றும் எஸ்.டி., வகுப்பினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்க, சட்டத் திருத்த மசோதா கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இது தொடர்பாக, அனைத்துக் கட்சி கூட்டம், பிரதமர் தலைமையில் நடைபெற்றது. அதில், சமாஜ்வாதி கட்சியைத் தவிர, பிற கட்சிகள் அனைத்துமே ஆதரவு தெரிவித்திருந்தன. இதையடுத்து, இது தொடர்பான மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை இரு தினங்களுக்கு முன் ஒப்புதல் வழங்கியது. இதன் தொடர்ச்சியாக, பார்லிமென்டில் நேற்று, மசோதா தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே, நிலக்கரி சுரங்க முறைகேடு ஊழல்கள் காரணமாக, 10 நாட்களாக பார்லிமென்ட் முடங்கியது. இருப்பினும், எந்த சூழ்நிலையிலும், மசோதாவை ராஜ்ய சபாவில் அறிமுகப்படுத்த முடிவெடுத்து, அரசு தயாராக இருந்தது.

அமளி துவக்கம்:

நேற்று காலை, ராஜ்யசபா துவங்கியதும், அவைத் தலைவர், ஹமீத் அன்சாரி, முன்னாள் ஜனாதிபதி ராதா கிருஷ்ணனை நினைவு கூர்ந்து, ஆசிரியர் தினச் செய்தியை வாசித்து முடித்தார். தொடர்ந்து, "கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும்' என அறிவித்தபோது, சபையில் அமளி ஏற்பட்டது; இதையடுத்து சபை, உடனடியாக ஒத்தி வைக்கப்பட்டது. பின், 12:00 மணிக்கு மீண்டும் கூடியபோது, தலைவர் நாற்காலியில், குரியன் அமர்ந்திருந்தார். பதவி உயர்வில், இட ஒதுக்கீடு தரும் மசோதாவை அறிமுகப்படுத்தும்படி, குரியன் கேட்டுக் கொண்டார். உடனே, பிரதமர் அலுவலக இணையமைச்சர் நாராயணசாமி எழுந்து, மசோதாவை அறிமுகப்படுத்துவதாகக் கூறி, பேச ஆரம்பித்தார். அப்போது, சமாஜ்வாதி கட்சி எம்.பி.,க்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிடக் கிளம்பினர். பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.,க்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, சமாஜ்வாதி எம்.பி., நரேஷ் அகர்வாலுக்கும், பகுஜன் சமாஜ் எம்.பி., அவதார் சிங்கிற்கும், கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, இருவரும், ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டனர்.

இதைப் பார்த்து, பிற எம்.பி.,க்கள், அவர்களை விலக்கி விட்டனர். ஐந்து நிமிடங்கள் நடைபெற்ற, இந்த தள்ளுமுள்ளு சம்பவத்தால், சபையில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த மோதல் நடந்தபோது, பிரதமர் மன்மோகன் சிங்கும், சபையில் இருந்தார். நிலைமை முற்றுவதை உணர்ந்த குரியன், சபையை, மதியம், 2:00 மணிக்கு ஒத்தி வைத்தார். சபை கூடியதும், மீண்டும் ரகளை ஆரம்பமானது. இதையடுத்து, சபை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

லோக்சபாவில்...:

லோக்சபாவிலும் நேற்று கடும் அமளி காணப்பட்டது. அ.தி.மு.க., - தி.மு.க.,-எம்.பி.,க்கள் வழக்கம் போல, இலங்கை ராணுவத்தினருக்கு, தமிழகத்தில் பயிற்சி அளிப்பதை எதிர்த்து கோஷங்கள் போட்டனர். ராஜபக்ஷே வருகையை எதிர்த்து, திருமாவளவன் கோஷங்கள் போட்டபடி இருந்தார். கேள்வி நேரத்தின்போது, சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட தி.மு.க., - எம்.பி.,க்கள், கேள்வி நேரம் முடிந்ததும், அமைதியாக அமர்ந்திருந்தனர். திருமாவளவன் தன் முற்றுகையை தொடர்ந்தவுடன், வேறு வழியின்றி, தி.மு.க., - எம்.பி.,க்கள் எழுந்து வந்து, மீண்டும் கோஷங்கள் எழுப்பினர். இவ்வாறு, தொடர்ந்து அமளி இருந்து கொண்டிருந்ததால், இரண்டு சபைகளுமே, மதியத்திற்கு மேல், முழுவதுமாக ஒத்தி வைக்கப்பட்டன.

மாயாவதி அதிருப்தி:

நிலக்கரி ஊழல் விவகாரம், பரபரப்பாக போய்க் கொண்டிருப்பதால், அதை முறியடிக்கும் விதமாக, மத்திய அரசு இந்த மசோதாவைக் கையில் எடுத்துள்ளது. தாங்கள் நிறைவேற்ற முன்வந்தாலும், அதை எதிர்க்கட்சிகள் தடுத்து விட்டன என, பிரசாரம் செய்வதற்காக, ஆளுங்கட்சி இவ்வாறு நடந்து கொள்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இருப்பினும், இந்த விவகாரத்தில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கே சாதகமாகும் வகையில், வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அவர் தான், இந்த மசோதாவை கொண்டு வருவதில், உறுதியாக இருந்து வந்துள்ளார். காங்கிரசிடம் நெருக்கடி கொடுத்து, இந்த மசோதாவை நிறைவேற்றும் படியும் கேட்டுக் கொண்டார். பார்லிமென்ட்டிற்கு வெளியே, நேற்று நிருபர்களிடம் பேசிய மாயாவதி, ""இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதில், அரசுக்கு நிஜமான அக்கறை கிடையாது,'' என, கவலை தெரிவித்தார்.

www.dinamalar.com (6 September 2012 )
http://www.makkalsanthai.com/


Wednesday 29 August 2012

லோக்சபாவில் எம்.பி.,க்கள், "அட்டென்டென்ஸ்' எப்படி? தம்பிதுரை, அத்வானி முதலிடம்


புதுடில்லி: தற்போதைய, 15வது லோக்சபாவின், மூன்றாவது ஆண்டில், காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி, முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து ஆகியோர் மிகக் குறைவான நாட்களே சபைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு சார்பற்ற அமைப்பு ஒன்று, தற்போதைய, 15வது லோக்சபாவின் மூன்றாவது ஆண்டில் (2011 மே முதல் 2012 வரை), எம்.பி.,க்களின் வருகை குறித்து, அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த 2011 மே முதல் 2012 மே மாதம் வரை நடந்த லோக்சபாவின் மொத்தம், 85 அமர்வுகளில், ராகுல், 24 நாட்கள் மட்டுமே, சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

தற்போதைய உ.பி., முதல்வரும், முன்னர், எம்.பி.,யாக இருந்தவருமான, அகிலேஷ் யாதவ், 31 நாட்கள் கலந்து கொண்டுள்ளார். பா.ஜ., கட்சியைச் சேர்ந்த எம்.பி.,யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி ஆகிய இருவரும், 16 நாட்கள் மட்டுமே சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர்.

"2ஜி' வழக்கில், கைதாகி சிறையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, நான்கு நாட்களும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஊழல் வழக்கில் கைதான சுரேஷ் கல்மாடி, 30 நாட்களும், ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடா, 25 நாட்களும் சபைக்கு வந்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா, சபை நடந்த, 85 நாட்களில், 34 நாட்கள் சபைக்கு வந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதால், பெரும்பாலான நாட்கள் வரவில்லை. அ.தி.மு.க., எம்.பி., தம்பித்துரை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்களான நிர்மல் கத்தாரி, பி.எல்.புனியா, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி ஆகியோர், லோக்சபா நடந்த, 85 நாட்களிலும் சபைக்கு வந்துள்ளனர். லோக்சபா நடந்த, 85 நாட்களில், 110 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், 175 மணி நேரம், 51 நிமிடங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன. எம்.பி.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை பொறுத்தமட்டில், சோனியா, 2.32 கோடி ரூபாயும், அத்வானி 1.71 கோடி ரூபாயும், சுஷ்மா சுவராஜ் 8.58 கோடி ரூபாயும் செலவிட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

*News From http://www.dinamalar.com(29-Aug-2012)
http://www.makkalsanthai.com/


லோக்சபாவுக்கு தேர்தல் வந்தால் சந்திக்க தயார்: மம்தா அறிவிப்பு


கோல்கட்டா: ""லோக்சபாவுக்கு முன்கூட்டியே தேர்தல் வந்தால், அதை சந்திக்கத் தயார்; அதே நேரத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கவிழ்வதை, நாங்கள் விரும்பவில்லை,'' என, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு உட்பட பல பிரச்னைகள் காரணமாக, லோக்சபாவிற்கு முன்கூட்டியே தேர்தல் வரலாம் என்ற ஒரு சூழல் உருவாகியுள்ளதாக, அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தச் சூழலில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கியக் கட்சியான, திரிணமுல் காங்., கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியிடம், கோல்கட்டாவில், நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த மம்தா பானர்ஜி கூறியதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அதன் ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பது தான் எங்களது விருப்பம். லோக்சபாவுக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதை, நாங்கள் விரும்பவில்லை. ஒரு வேளை லோக்சபாவிற்கு இடைத்தேர்தல் நடப்பதற்கான சூழல் உருவானால், அது ஒரு முக்கியப் பிரச்னை. எப்படி இருந்தாலும், அரசியல் சூழலுக்கு ஏற்ப, தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.


*News From http://www.dinamalar.com(29-Aug-2012)
http://www.makkalsanthai.com/


Friday 24 August 2012

தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: கட்சியினருக்கு திமுக வேண்டுகோள்


மக்களின் பிரச்னைகளை முன்னெடுத்து செல்லும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைதியான முறையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்த திமுக தொண்டர்களுக்கு அதன் தலைவர் கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த போராட்டங்கள் குறித்து உரிய தகவல்களை போலீசாருக்கும், நாளேடுகளுக்கும் முன்பே அறிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தொடரும் மின்வெட்டு, காவிரி தண்ணீர் திறந்து விடப்படாததால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல அறவழியில் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்னைகள் மட்டுமல்லாமல் தீர்வு கிடைக்காத உள்ளூர் பிரச்னைகளுக்காகவும் திமுக உறுப்பினர்கள் பாடுபட வேண்டும் என கருணாநிதி கூறியுள்ளார்.


* News From http://puthiyathalaimurai.tv(24-Aug-2012)
http://www.makkalsanthai.com/


நான்காவது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்


நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டன.



இதனால் இன்று காலை அவை கூடிய சிறிது நேரத்திற்குள்ளாகவே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இதனால், தொடர்ந்து நான்காவது நாளாக இரு அவைகளும் முடக்கப்பட்டுள்ளன. நிலக்கரிச் சுரங்க முறைகேடு தொடர்பாக அரசுக்கு ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தி வருகிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவையை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


* News From http://puthiyathalaimurai.tv(24-Aug-2012)
http://www.makkalsanthai.com/


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More