Wednesday 29 August 2012

லோக்சபாவுக்கு தேர்தல் வந்தால் சந்திக்க தயார்: மம்தா அறிவிப்பு


கோல்கட்டா: ""லோக்சபாவுக்கு முன்கூட்டியே தேர்தல் வந்தால், அதை சந்திக்கத் தயார்; அதே நேரத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கவிழ்வதை, நாங்கள் விரும்பவில்லை,'' என, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு உட்பட பல பிரச்னைகள் காரணமாக, லோக்சபாவிற்கு முன்கூட்டியே தேர்தல் வரலாம் என்ற ஒரு சூழல் உருவாகியுள்ளதாக, அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தச் சூழலில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கியக் கட்சியான, திரிணமுல் காங்., கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியிடம், கோல்கட்டாவில், நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த மம்தா பானர்ஜி கூறியதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அதன் ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பது தான் எங்களது விருப்பம். லோக்சபாவுக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதை, நாங்கள் விரும்பவில்லை. ஒரு வேளை லோக்சபாவிற்கு இடைத்தேர்தல் நடப்பதற்கான சூழல் உருவானால், அது ஒரு முக்கியப் பிரச்னை. எப்படி இருந்தாலும், அரசியல் சூழலுக்கு ஏற்ப, தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.


*News From http://www.dinamalar.com(29-Aug-2012)
http://www.makkalsanthai.com/


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More