Friday 24 August 2012

தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: கட்சியினருக்கு திமுக வேண்டுகோள்


மக்களின் பிரச்னைகளை முன்னெடுத்து செல்லும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைதியான முறையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்த திமுக தொண்டர்களுக்கு அதன் தலைவர் கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த போராட்டங்கள் குறித்து உரிய தகவல்களை போலீசாருக்கும், நாளேடுகளுக்கும் முன்பே அறிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தொடரும் மின்வெட்டு, காவிரி தண்ணீர் திறந்து விடப்படாததால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல அறவழியில் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்னைகள் மட்டுமல்லாமல் தீர்வு கிடைக்காத உள்ளூர் பிரச்னைகளுக்காகவும் திமுக உறுப்பினர்கள் பாடுபட வேண்டும் என கருணாநிதி கூறியுள்ளார்.


* News From http://puthiyathalaimurai.tv(24-Aug-2012)
http://www.makkalsanthai.com/


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More